தீபாவளி வந்தாச்சு. புதுத் துணிகள் எடுத்தாச்சு. பட்டாசெல்லாம் வாங்கியாச்சு. இனிப்பு கார வகைகளும் செஞ்சாச்சு. அப்புறம் என்ன சொல்ல வரேன்னு பாக்கறிங்களா? ஒன்னும் பெருசா சொல்ல வரல. இருந்தாலும் என்னமோ சொல்றேன். கேட்டுக்கங்க. காலையில அஞ்சு மணிக்கு கரெக்டா எந்திரிச்சிருங்க. லேட்டா எந்திரிச்சா என்ன? அப்படின்னு கேள்வி கேட்கிறவங்கள ஒன்னும் பண்ண முடியாது. உங்க இஷ்டம் எப்ப வேணாலும் எந்திரிங்க. எப்படியோ எந்திரிச்சாச்சு. அடுத்து குளிச்சு புதுத்துணி போட்டு சாமி கும்பிட்டதுக்கு அப்புறம் தான் வெடி விடனுமா? எந்திரிச்சவுடனே விடக் கூடாதான்னு கேட்கரவங்க ஒரு சரம் அல்லது ஒரு அணுகுண்டு மட்டும் ஆசைக்கு காலையில விட்டுக்கங்க.